சட்டீஸ்கரில் அமைச்சருக்கு எதிராக பாலியல் சிடி தயாரித்தவர் பாஜ.வை சேர்ந்தவர்: குற்றப்பத்திரிகையில் சிபிஐ குற்றச்சாட்டு

புதுடெல்லி : சட்டீஸ்கர் பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜேஷ் முனாத்துக்கு எதிராக போலியாக தயாரிக்கப்பட்ட பாலியல் சிடி வெளியான விவகாரத்தில் பாஜ.வை சேர்ந்தவர்  பின்னணியில் உள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.சட்டீஸ்க்ர மாநிலத்தில் முதல்வர் ராமன் சிங் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இவருடைய அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள ராஜேஷ் முனாத்துக்கு எதிராக கடந்தாண்டில்  பாலியல் சிடி வெளியானது. இது பற்றி விசாரித்து வரும் சிபிஐ, இந்த விவகாரத்தில் முனாத்துக்கு எதிராக இம்மாநில பாஜ.வை சேர்ந்த கைலாஷ் முரார்கா செயல்பட்டு உள்ளதாக குற்றம்  சாட்டியுள்ளது.

அவர் சிடி தயாரித்ததாக கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக ராய்ப்பூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சிபிஐ  குற்றப்பத்திரிகை செய்தது, இதில், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பாகல்,  பாஜவை சேர்ந்த கைலாஷ் முரார்க்கா  மற்றும் விஜய் பாண்டியா, வினோத் வர்மா  உள்ளிட்டோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மாநில காங்கிரஸ் தலைவர் பாகலை கைது செய்துள்ள போலீசார் அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவருக்கு ஜாமீன் அளிக்கவும் நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்துள்ளது. இது குறித்து பாகல் கூறுகையில், இந்த வழக்கில் நான் சதி செய்து சிக்க வைக்கப்பட்டுள்ளேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: