திருவனந்தபுரம்: பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியின் சகோதரிக்கு கொலை மிரட்டல் விடுத்த, பிஷப் பிராங்கோவின் நண்பர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கேரள மாநிலம், குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியின் சகோதரி காலடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:பிஷப் பிராங்கோவின் நண்பரான பெரும்பாவூரைச் சேர்ந்த ரம்பான் தாமஸ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் எனது வீட்டிற்கு வந்தார்.