பலாத்கார புகாரை வாபஸ் பெறாததால் கன்னியாஸ்திரி சகோதரிக்கு கொலை மிரட்டல்: பிஷப் பிராங்கோ நண்பர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியின் சகோதரிக்கு கொலை மிரட்டல் விடுத்த, பிஷப் பிராங்கோவின் நண்பர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கேரள மாநிலம், குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பலாத்கார புகார் கூறிய  கன்னியாஸ்திரியின் சகோதரி காலடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:பிஷப் பிராங்கோவின் நண்பரான பெரும்பாவூரைச் சேர்ந்த ரம்பான் தாமஸ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் எனது வீட்டிற்கு வந்தார்.

அப்போது பிராங்கோ மீது கூறப்பட்டுள்ள புகாரை வாபஸ்  பெறுமாறு உனது சகோதரியிடம் கூறு என வற்புறுத்தினார். ஆனால் நான் முடியாது என்று மறுத்துவிட்டேன்.கடந்த 3 தினங்களுக்கு முன் போனில் என்னை தொடர்பு கொண்ட அவர், புகாரை வாபஸ் பெறாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறினார். இதனால் எனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ேபாலீசார் ரம்பான் தாமஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: