சென்னை: மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி பெண் கலெக்டர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவள்ளூர் அடுத்த பேரத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ராஜசேகர் (12), மணவாளநகர் பகுதியை சேர்ந்த சிறுவன் சரண் (6), திருவள்ளூர் நகராட்சியில் வசிக்கும் சிறுமி ஷர்மிலி (11), நல்லாட்டூர் ஏழுமலை (45), நெமிலி சேகர் மகள் பிரவீனா (11). அங்கு நடந்த ரத்த பரிசோதனையில், இவர்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. மாணவியையும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், சிறுமி ஷர்மிலி சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று திடீரென ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கமிஷ்னர் முருகேசன், திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், துணை வட்டாட்சியர் வெங்கடேசன், சுகாதாரத்துறை, நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி சாலை, பஜார் வீதி, மோதிலால் தெரு, அய்யனார் அவென்யூ, பெரியகுப்பம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிகாலையிலேயே திடீர் ஆய்வு செய்தார்.