வேலையை விட்டு நீக்கியதால் முதியவர் தற்கொலை - பள்ளி முன் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்

சென்னை: வேலையை விட்டு நீக்கியதால் தற்கொலை செய்துகொண்டவரின் சடலத்தை தனியார் பள்ளி முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளுர் அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(64). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், பஸ்சில் இருந்து குழந்தைகளை இறக்கும்போது, தவறான முறையில் ஒரு மாணவியை பிடித்து இறக்கியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து மாணவியின் பெற்றோர்,  கடந்த 20ம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம்  விசாரணை நடத்தியது. அப்போது முனுசாமியை மாணவியின் பெற்றோர் தாக்கியதாகவும், அதைத்தொடர்ந்து அவரை வேலையைவிட்டு பள்ளி நிர்வாகம் நீக்கியதாவும் கூறப்படுகிறது. இதனால் முனுசாமி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டில் முனுசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முனுசாமியின் சடலத்தை பள்ளி  நுழைவாயில் முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீசார் விரைந்துசென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: