மதுரை: குமரி மாவட்டம், பொன்மனையை சேர்ந்த வனஜா, மதுரையிலுள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: என் மகள் ஷோபாவுக்கும், ரமேஷ்பாபு என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2000ம் ஆண்டில் என் மகளை பிரசவத்திற்காக குலசேகரம் கூட்டுறவு சங்க மருத்துவமனையில் சேர்த்தோம். கடந்த 3.3.2000ல் என் மகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது ஏற்பட்ட பாதிப்பால் என் மகள் கோமாவிற்கு சென்றார். இதனால் இழப்பீடு கோரி ரமேஷ்பாபு இந்த நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். பல ஆண்டுகளாக என் மகளுக்கு கோமாவில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரது கணவர் ரமேஷ்பாபு, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.