திருவொற்றியூர்: எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 9வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (25). இவர் மீது எண்ணூர் போலீஸ் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பிரமாண பத்திரத்தை மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ராம்குமாரை 111 நாட்கள் சிறையில் அடைக்க மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலை செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து, ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.