சைதாப்பேட்டை - கிண்டி இடையே ரயில் மோதி 2 பேர் பலி

சென்னை: சைதாப்பேட்டை - கிண்டி இடையே நேற்று ரயில் பாதையை கடக்க முயன்றபோது, புறநகர் மின்சார ரயில் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று காலை புறநகர் மின்சார ரயில் புறப்பட்டது. அந்த ரயில் சைதாப்பேட்டை-கிண்டி இடையே வந்தபோது ரயில் பாதையை கடந்து சென்ற இரண்டு பேர் மீது ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிைவத்தனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி இறந்தவர்களில் ஒருவர் தி.நகரை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் சந்திரசேகர் (33) என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு நபரின் அடையாளம் தெரியவில்ைல. அவர் யார், எதற்காக இவர்கள் ரயில்பாதையை கடந்து சென்றார்கள் என்று ரயில்வே  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாதத்தில் 30 பேர் சாவு

கடந்த 3 மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரிழந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டும் பயணிகள் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: