தமிழக பள்ளி மாணவர்கள் பின்லாந்து செல்ல ஏற்பாடு

சென்னை: தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படிப்போரில் அறிவியல் கண்காட்சிகளில் சிறப்பாக செயல்முறைகள் செய்து காட்டும் 50 மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களை அரசு செலவில் பின்லாந்து அழைத்து சென்று அங்குள்ள கல்வி முறை மற்றும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பாடு ஆகியவற்றை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்கள் பின்லாந்து அழைத்து செல்லப்படுவார்கள். தமிழகத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் பின்லாந்து அழைத்து செல்லப்படுவது இதுதான் முதல்முறை என்பது  குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: