ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு 28ம் தேதி தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த தேர்வு நடக்கிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 789 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், சுமார் 3 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 3ம் தேதி நடந்தது. தமிழகத்தை பொறுத்தவரை இத்தேர்வை சுமார் 20,000 பேர் எழுதினர். இந்நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் ஜூலை 14ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் சுமார் 9000 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 432 பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு வருகிற 28ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமி நிறுவன தலைவர் சங்கர் கூறியதாவது:

சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வில் வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதல்தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. தொடர்ந்து 29ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது. 30ம் தேதி காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு 4), அக்டோபர் 6ம் தேதி இந்திய ெமாழிகளில் ஒருதாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கில தேர்வும் நடக்கிறது.

கடைசி நாளான 7ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல்தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடைபெறும். சென்னையில் சுமார் 432 பேர் மெயின் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தமிழகத்தில் 852 பேர் எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக நேர்முக ேதர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கடும் கட்டுப்பாடுகள்

சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 2 இடங்களில் இந்த தேர்வு நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். 10 நிமிடத்துக்கு முன்பாக கேட் அடைக்கப்படும் என்று தேர்வர்ளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 நிமிடங்களுக்கு பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்துக்கு செல்போன், மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபரகரணங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு சென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எதிர்வரும் தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படுவார்கள். தேர்வு கூடத்திற்கு விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்றும் யு.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது. தேர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: