வெளிமார்க்கெட்டை விட சிறப்பு அங்காடிகளில் 5 சதவீதம் விலை குறைவு: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு அங்காடிகளில் வெளி மார்க்கெட்டை விட 5 சதவீதம் விலை குறைவு என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  கூறினார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு  வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: 

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பாக 100 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளைத் திறக்க திட்டமிட்டதின் தொடர்ச்சியாக 8 மாவட்டங்களில் இதுவரை 23 சிறு கூட்டுறவு  சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது.  இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிகபட்ச சில்லரை விலையிலிருந்து குறைந்தபட்சம் 5 சதவீதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: