சென்னை: ஒளிப்பதிவாளர் தர்மா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67.ஏழாவது மனிதன் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனவர் தர்மா. தமிழ், தெலுங்கு மொழிகளில் 35 படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
திருமணம் ஆகாத அவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். நேற்று மாலை இறுதிச்சடங்கு நடந்தது