×

இரட்டை இலை வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி:  இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்  நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. செம்மலை எம்எல்ஏ தரப்பு வாதம் முடிந்ததால் மதுசூதனன் தரப்பு வாதங்கள் தொடங்க இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி, சங்கீதா டிங்கிரி சேகல் அமர்வில் நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கை இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனால், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு  வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Double leaf.case, trial reopened today ,Delhi High Court
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்