சென்னை: எச்.ராஜா சிறை செல்வார் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி: யாராக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என யாராக இருந்தாலும் சரி ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே இருப்போம் எனவே பதவி ஏற்கிறோம். அதை கருணாஸ் கடைபிடிக்கவில்லை. தமிழகத்தில் மத கலவரம், ஜாதி கலவரம் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் மாமியார் வீடு ஜெயில் தான் என்பது புரிந்திருக்கும்.