எச்.ராஜா சிறை செல்வார்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை: எச்.ராஜா சிறை செல்வார் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி:   யாராக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என யாராக இருந்தாலும் சரி ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே இருப்போம் எனவே பதவி ஏற்கிறோம். அதை கருணாஸ் கடைபிடிக்கவில்லை.  தமிழகத்தில் மத கலவரம், ஜாதி கலவரம் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் மாமியார் வீடு ஜெயில் தான் என்பது புரிந்திருக்கும்.

எங்களுடைய தனித்தன்மையை எந்த நிலையிலும் நாங்கள் இழப்பதாக இல்லை. நாங்கள் ஆட்சிில் இணக்கமாக இருக்கிறோம் கட்சியை பொறுத்தவரை இணக்கமாக இல்லை. எச்.ராஜா மீது கடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில் அதற்கும் அவர் பதில் சொல்லிதான் ஆக வேண்டும். யார் யார் எல்லாம் உள்ளே போய்ட்டு வந்திருக்கிறார்கள் என்பதை கணக்கெடுத்திருப்பீர்கள். அந்த வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார். கவலைப்பட வேண்டாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: