போலீஸ் அதிகாரியின் மகள் லாரி ஏற்றி படுகொலை: சினிமா ஸ்டண்ட் மாஸ்டர், மகன் மீது புகார்

சென்னை: சொத்து தகராறில் போலீஸ் அதிகாரியின் மகளை லாரி ஏற்றி கொலை செய்ததாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சவுகார்பேட்டை, திருபள்ளி தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் (52). வடக்கு கடற்கரை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ. இவரது 2வது மகள் ரம்யா (28). நுங்கம்பாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ரம்யா மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சென்ட்ரல் அருகே வந்தபோது திடீரென அவ்வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், மொபட்டுடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து, யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரம்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இது தொடர்பாக பட்டாபிராம் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனி (49) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ரம்யாவின் தந்தையும், சிறப்பு எஸ்ஐயுமான துளசிங்கம் யானைக்கவுனி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், எனது மாமானார் ரத்தினம், சினிமாவில் சண்டைகாட்சிகளை அமைத்து தரும் பயிற்சியாளராக இருக்கிறார். அவரது மகன் எத்திராஜ் ஆகியோர் சொத்து தகராறில் திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி என் மகளை கொலை செய்துள்ளனர். எனது மகள் சாவுக்கு 2 பேரும் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: