சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலாளர்கள் சங்கம் கூட்டம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன் பேசுகையில், ‘தமிழகத்தில் பொதுவிநியோக திட்டம் பாழாக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. சமீபத்தில் நடந்த எங்கள் சங்கத்தின் 7வது மாநில மாநாட்டில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.