சென்னை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : சென்னை எழும்பூரில் இருந்து புதுச்ேசரிக்கு தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் புதுச்சேரியில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து அடையும். மறு மார்க்கத்தில் மாலை 6.10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். இந்த ரயில் இன்று முதல் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற 5 நாட்களும் ரயில் சென்னை கடற்ரையில் இருந்து புறப்படும். அதன்படி மாலை 5.35 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு 5.50க்கு எழும்பூர் வந்தடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.