விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவை கொலை செய்வதற்கு முன்பு மாவோஸ்டுகள் காரை பொது மக்கள் போல் சுற்றி வளைத்த நின்ற மாவோஸ்டுகள் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கொலை செய்த பிறகு வனப்பகுதியை நோக்கி ஒடி செல்லும் மாவோஸ்டுகள் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா தும்ரிகூடாவில் இருந்து கிராம சபைக் கூட்டத்திற்கு சென்று காரில் வந்து கொண்டிருந்தபோது பொதுமக்கள் போல் மாவோயிஸ்டுகள் சாலையின் இருபுறமும் மனு வழங்குவது போல் காத்திருந்தனர்.
இதனை அறியாத எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவ் காரை நிறுத்தி அவர்களுடம் பேசிக்கொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் எம்எல்ஏவின் பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கிகளை பறித்து கொண்டு எம்எல்ஏவையும், முன்னாள் எம்எல்ஏவையும் கீழே இறக்கி தனித் தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் போல் காரை சுற்றி நின்ற காட்சிகளும், சுட்டுக்கொன்ற பிறகு வனபகுதியை நோக்கி மாவோஸ்டுகள் ஓடி செல்லும் காட்சிகள் சம்பவ இடத்தில் இருந்த பொது மக்கள் ஒருவர் எடுத்த செல்போன் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வனப்பகுதியை நோக்கி ஓடி செல்வதில் இருக்கும் ஆண் நபர் சீனு பாபு என்கின்ற ராயுடு என்ற மவோஸ்டும், காமேஸ்வரி என்கின்ற சிந்து என்ற மாவோஸ்டு என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி