திருவொற்றியூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். மணலி பெரிய சேக்காடு முருகேசன் தெருவில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க மாளிகை திறப்பு விழா சங்க தலைவர் டி.ஏ.சண்முகம் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க மாளிகையை திறந்து வைத்தனர். வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது, “பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிமக்களிடம் பிக்பாக்கெட் அடிப்பதுபோல மத்திய அரசு செயல்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைக்கவேண்டும்.