தருமபுரி: ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா சென்ற பயணிகளை காவலர்கள் லத்தியால் தாக்கியுள்ளனர். சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பரிசலில் செல்வது தொடர்பாக பயணிகளுக்கும், பரிசல் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வந்த காவலர்கள் சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி