அரசு மருத்துவமனைகளில் உள்ள 1800 மருத்துவர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - விஜயபாஸ்கர்

தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள 1800 மருத்துவர் காலிபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் செவிலியர் பணி இடங்கள் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: