சென்னை: தாமிரபரணி புஷ்கர விழா தடைக்கு எதிரான வழக்கில் நெல்லை ஆட்சியர் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நெல்லை தைப்பூசப் படித்துறை, குருத்துத்துறை ஆகிய இடங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. புலவர் மகாதேவன் தொடுத்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறையும் அக்.3ல் பதில்தர உத்தரவிட்டது.