திருவள்ளூர்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெரியக்குப்பத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஷர்மிலி மற்றும் ராஜசேகர், சரண் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.