தஞ்சாவூர்: தமிழகத்தில் முதல்முறையாக ரூ.6 கோடியில் தஞ்சை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவமனையில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.