கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே இறச்சகுளத்தில் போலீஸ் வாகனம் கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். திருச்சி சிறையில் இருந்து 13 இலங்கை தமிழர்களை இரணியல் கோர்ட் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.