சென்னையில் சொத்துக்காக தாயை கொலை செய்த கொடூர மகன் - போலீஸ் கைது

சென்னை: சென்னையை அடுத்த பாலவாக்கம் அருகே சொத்திற்காக தனது தாயையே கட்டையால் அடித்துக் கொலை செய்து முகத்தில் தீவைத்த கொடூர மனம் கொண்ட மகனை போலிசார் கைது செய்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் மணியம்மை தெருவைச் சேர்ந்தவர் ராணி அம்மாள். கணவரை இழந்த அவர் அங்குள்ள குடியிருப்பில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் ராணியின் கணவர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி மகன் பெர்னாட் என்கிற பர்னபாஸ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

அதற்கு ராணி அம்மாள் மறுப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெர்னாட் வீட்டிற்கு வெளியே கட்டிலில் அமர்ந்திருந்த ராணி அம்மாளின் தலையில் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கொசுவை விரட்டுவதற்காக மூட்டியிருந்த தீயில் அவரது முகத்தை அழுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். கொலை குறித்து தகவலறிந்து சென்ற போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ராணி அம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தாயையே கொலை செய்த கொடூர மனம் கொண்ட மகன் பெர்னாட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: