சிறைத்துறை அதிகாரிகள் 6 பேர் அதிரடி மாற்றம்

சென்னை: புழல் சிறையில் போலீசார் சமீபத்தில் நடத்திய அதிரடி ரெய்டில், கைதிகள் சிலர், சிறை விதிகளுக்கு புறம்பாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.அதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகளில் பலரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட அறிக்கை: சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் இளைஞர் சிறை கண்காணிப்பாளராகவும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், சென்னை புழல் சிறைகண்காணிப்பாளராகவும் மாற்றம் செய்யப்படுகின்றனர்.கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணராஜ் பதவி உயர்வு பெற்று அதே சிறையில் கண்காணிப்பாளராகவும், திருச்சி மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசன் பதவி உயர்வு பெற்று அதே சிறையில் கண்காணிப்பாளராகவும், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளராக இருந்த ஆண்டாள் வேலூர் சிறைக்கும், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் கடலூர் சிறை கண்காணிப்பாளராகவும் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: