மாதவரத்தில் மதுஅருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருவொற்றியூர்: மாதவரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் குமார் (25). இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மாரியம்மன் கோயில் தெருவில் நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது, அந்த தெருவில் ஒரு மூளையில் ஒரு கும்பல் மதுஅருந்திக் கொண்டு இருந்தது. இதை பார்த்த வினோத்குமார் அவர்களிடம் சென்று பொதுமக்கள் செல்லக்கூடிய தெருவில் மது குடிக்கலாமா? என்று  தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வினோத்குமாரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கிய தோடு தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக  வெட்டிவிட்டு தப்பியது.  ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய வினோத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், வினோத்குமார் வெட்டிய அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (28), பிரகாஷ் (26), ரமேஷ் (25), வாசு (26),  மணிகண்டன் (25), ஜெபகுமார் (32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: