மனைவி, க.காதலனுக்கு சரமாரி கத்திக்குத்து: கணவன், தம்பிக்கு வலை

தாம்பரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி (38). பிரபல ரவுடி. இவரது மனைவி வனிதா (22).  கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார், பாலாஜியை கொலை வழக்கில் கைது  செய்து சிறையில் அடைத்தனர். அந்நேரத்தில் வனிதாஸ்ரீக்கும், அதே பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரான கணபதி (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து, வனிதாஸ்ரீ  தலைமறைவானார். இதைதொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த பாலாஜிக்கு, அவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்தது. இதையடுத்து, வனிதாயின் தம்பி அஜீத் (19), பாலாஜி ஆகியோர், வனிதா மற்றும் அவரது  கள்ளக்காதலனை தேடினர்.

அப்போது, இரும்புலியூர், ஏரிக்கரை தெருவில், 2 பேரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் பாலாஜி, அஜீத் ஆகியோர் அங்கு சென்றனர்.  அவர்களை பார்த்ததும், கணபதி மற்றும் வனிதா அதிர்ச்சிடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் கத்தியால் குத்திவிட்டு அவர்கள் தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி  வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: