தாம்பரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி (38). பிரபல ரவுடி. இவரது மனைவி வனிதா (22). கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார், பாலாஜியை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்நேரத்தில் வனிதாஸ்ரீக்கும், அதே பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரான கணபதி (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து, வனிதாஸ்ரீ தலைமறைவானார். இதைதொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த பாலாஜிக்கு, அவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்தது. இதையடுத்து, வனிதாயின் தம்பி அஜீத் (19), பாலாஜி ஆகியோர், வனிதா மற்றும் அவரது கள்ளக்காதலனை தேடினர்.