ஆட்டோவில் கடத்தி வந்த 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: உத்திரமேரூர் - வந்தவாசி  சாலை வேடபாளையம் அருகே நேற்று முன்தினம் மாலை உத்திரமேரூர் போலீசார் வாகன  தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு லோடு ஆட்டோ வந்தது. அதை போலீசார்  மறித்தபோது, நிற்காமல் வேகமாக  சென்றது. உடனே போலீசார், அந்த ஆட்டோவை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, ₹1.7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ  ஹான்ஸ், குட்கா பொருட்கள் இருந்தது  தெரிந்தது. இதையடுத்து போலீசார், குட்கா பொருட்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்து, மதுராந்தகம் அடுத்த  செங்குந்தர்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி (32) என்பவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: