எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா: 28ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, சென்னையில் உள்ள  அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி தேர்வு முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.  இந்த வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி தேர்வு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள (அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி  முதல் மாலை 2 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய மாற்றத்திறனாளிகள் உட்பட அனைவரும்  கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட பணிகாலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: