சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி தேர்வு முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி தேர்வு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள (அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறுகிறது.