மனைவி தற்கொலையில் போலீஸ்காரர் கைது

சென்னை: கடிதம் எழுதி வைத்துவிட்டு காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவலரை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகர்,  காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் அருண் கணேஷ் (26). தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக உள்ளார். இவரது மனைவி ரேவதி (23). தம்பதிக்கு அரிஷ் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சனிக்கிழமை வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், அருண் கணேஷ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் அதனால்தான் தற்கொலை  செய்துகொள்கிரேன் என்று அவர் இறப்பதற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. இந்நிலையில், ரேவதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை  காவலர் அருண் கணேஷை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பாக திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: