அரசு முதியோர் இல்லத்தில் அடுத்தடுத்து 4 பேர் மர்ம சாவு : விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே அரசு முதியோர் இல்லத்தில் அடுத்தடுத்து 2 பெண்கள் உட்பட 4 பேர் மர்மமாக இறந்தனர். கேரளாவின் மலப்புரம்  மாவட்டம் தவனூரில் அரசு முதியோர் காப்பகம் உள்ளது. இங்கு 50க்கு மேற்பட்ட  ஆண் மற்றும் பெண் ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் தேவி  என்ற மூதாட்டி திடீர் என்று இறந்தார். இவரது உடல் காப்பக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று காளியம்மா, வேலாயுதன்,  கிருஷ்ணமோகன் என 3 பேர் திடீர் என்று இறந்தனர்.இதனால் முதியவர்கள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.இது குறித்து தவனூர்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மலப்புரம் கலெக்டர், எஸ்பிக்கு மாநில  மனித உரிமை ஆணைய தலைவர் மோகன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: