ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ.வை கொன்ற மாவோயிஸ்ட்டுகள் புகைப்படம் வெளியீடு

திருமலை: ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு அரசு மரியாதையுடன் நேற்று இறுதிச்சடங்கு நடந்தது.ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமாவை நேற்று முன்தினம் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். நேற்று இருவரின் உடலிலும் தெலுங்கு தேசம் கட்சி கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதையுடன்இறுதிச்சடங்கு நடந்தது. இந்தநிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த ஆந்திர மாநில  டிஜிபி ஆர்.பி. தாகூர் தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு அமெரிக்காவில் இருந்து ஐதராபாத் வழியாக இன்று மாலை விசாகப்பட்டினம் வர உள்ளார். இந்நிலையில், எம்எல்ஏ.க்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரடியாக பார்த்தவர்கள் கூறிய அடையாளங்கள் அடிப்படையில், விசாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ராகுல் சர்மா மாவோஸ்டுகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் சீனு பாபு என்ற சுனில், அருணா என்ற வெங்கட்ரவி சைதன்யா, காமேஸ்வரி ஆகிய 3 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: