பல நாட்கள் போராடியும் திரையுலகின் ஒரு கோரிக்கையை கூட அரசு நிறைவேற்றவில்லை - விஷால் பேட்டி

சென்னை: திரையுலகினர் பல நாட்கள் போராடியும் ஒரு கோரிக்கையை கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை என நடிகர் விஷால் கூறினார். விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் சண்டக்கோழி 2. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. முன்னதாக நிருபர்களிடம் விஷால் கூறியதாவது: நடிகர் கருணாஸ் கைது பற்றி கேட்கிறீர்கள். இது ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது. அதே சமயம் அதற்கென ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அதை தாண்டும்போது சட்டப்படியான நடவடிக்கைகளை சந்தித்துதான் ஆக வேண்டும். எச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது தவறுதான். நானே எல்லை மீறி பேசினால் என் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது தவறுதான். சினிமா துறைக்கான கோரிக்ைககளை போராடித்தான் பெற வேண்டியுள்ளது. திரையுலகினரின் ஒரு கோரிக்கையை கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அரசு நிறைவேற்றும் என நாங்களும் காத்திருக்கிறோம். இவ்வாறு விஷால் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: