ஒரத்தநாடு, திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு  பஸ்நிறுத்தம் அருகே மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள பெரியார் சிலை  மீது நேற்று முன்தினம் செருப்பு மாலை  அணிவிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த திகவினர்,  ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திக நிர்வாகிகள்,  டயர்களை எரித்தனர். அப்போது போலீசாருக்கும், திகவினருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. பட்டுக்கோட்டை டிஎஸ்பி  செங்கமலக்கண்ணன் வந்து  பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஊர்வலமாக சென்று ஒரத்தநாடு காவல் நிலையத்தில் திகவினர்  புகார் செய்தனர். இதுபோல் திருச்சி  அடுத்த சோமரசம்பேட்டையில் தோகைமலை மெயின்ரோட்டில் உள்ள பெரியார் சிலையில் நேற்றுமுன்தினம் இரவு கைத்தடி உடைக்கப்பட்டு  அதன் அருகிலேயே வீசப்பட்டு  கிடந்தது. இதையடுத்து அங்கு ஏராளமான திகவினர் குவிந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: