3 மாவோயிஸ்ட்கள் கோர்ட்டில் ஆஜர்

ஈரோடு:  போலி ஆவணங்கள் மூலமாக சிம்கார்டு பெற்றதாக கேரளாவை சேர்ந்த வோயிஸ்ட் ரூபேஸ் (45) என்பவரை ஈரோட்டில் கைது செய்தனர்.  இதேபோல இந்த வழக்கில் தொடர்புடையதாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த வீரமணி (48), மதுரையைச் சேர்ந்த கண்ணன் (52)  ஆகியோரையும் கைது செய்தனர்.  இந்த வழக்கின் விசாரணைக்காக திருச்சூரில் இருந்து ரூபேசும், கோவையில் இருந்து வீரமணி, கண்ணன் ஆகியோரும்   போலீஸ் பாதுகாப்புடன்  ஈரோடு  நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அக்.24ல் மீண்டும் அவர்களை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: