டிரைவர் கொலையில் பா.ஜ. பிரமுகர்கள் இருவருக்கு ஆயுள்

நெல்லை:  நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் முத்துராமன் (35). பா.ஜ.பிரமுகர். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு  பிரிவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முத்துராமனை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கினர்.இதனால்  பழிக்குப்பழியாக  ஆட்டோ டிரைவர் சேக்முகமது காஜாமைதீன் (27) கொல்லப்பட்டார்.இதுதொடர்பாக ஏர்வாடி போலீசார் விசாரித்து, முத்துராமன் மற்றும் நம்பித்தலைவன் பட்டயத்தைச் சேர்ந்த பா.ஜ. பிரமுகர் கதிர்வேல்சாமி (42),  சாலைப்புதூரைச் சேர்ந்த பா.ஜ.பிரமுகர் மகேஷ் (38), ஏர்வாடியைச் சேர்ந்த சுதாகர், ராஜபாண்டி, மணிகண்டராஜா, ஜான்சன் தினேஷ், நாங்குநேரி சேர்மதுரை ஆகிய  8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை நெல்லை மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்நீதிபதி கிளாட்சன் பிளஸ்ட் தாகூர் விசாரித்து, கதிர்வேல்சாமி, மகேஷ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை  விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: