நெல்லை: நெல்லை முன்னீர்பள்ளம் அருகே ஆரைகுளத்தைச் சேர்ந்தவர் ஜேசு பால்ராஜ். இவரது மகன் நிக்சன் (19). பாளையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஜேசு பால்ராஜ் இறந்து விட்டதையடுத்து தற்போது மேலப்பாளையம் ராஜா நகரில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு நிக்சன் செல்போன் ஹெட்செட் மூலம் பாட்டுக் கேட்டுக்ெகாண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் ஹெட்செட்டில் மின்னல் தாக்கி நிக்சன் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் கதறி அழுதார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.