சென்னை : சென்னையில்மெட்ரோ ரயில் பணிகளின்போது சாலையில் நடுவில் மற்றும் ஓரங்களில் இருக்கும் விளக்குளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அகற்றியது. தற்போது இடங்களில் புதிய எல்இடி விளக்குகளை அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை அண்ணா சாலையில் தேவர் சிலை முதல் ஏஜி டிஎம்எஸ் வரை மற்றும் நேரு பூங்கா முதல் பச்சையப்பா கல்லூரி வரை எல்இடி விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன.