சென்னை: திட்டக்குடியில் 200 ஏக்கர் கோயில் நிலத்தை அபகரித்ததாக அவதூறு கருத்து தெரிவித்த பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா மீது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் கொடுத்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்துள்ளனர்.கடந்த 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பேசிய பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா “திட்டக்குடி குளத்தை ஆக்கிரமிச்சது யாரு? சிட்டிங் எம்.பி. அருண்மொழிதேவன், ஒரு எம்பியாக இருக்கிற ஆள் அதுவும் சிட்டிங் எம்.பி. கோயில் நிலத்தை 200 ஏக்கர் அபகரித்து இருக்கான். எங்கிட்ட எல்லா டாக்குமெண்டும் இருக்கு. கழகம் என்றாலே கலகம்தான். எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி” என்று பேசியுள்ளார்.இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.