மதுரை : மதுரை அருகே ஏழைகாத்தம்மன் கோயில் விழாவில் அம்பலக்காரர் என்ற முன்னுரிமை கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலூர் வெள்ளலூரில் ஏழைகாத்தம்மன் கோயிலில் அம்பலக்காரர் சமூகத்துக்கு முன்னுரிமை இருந்தது. அம்பலக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை ஐகோர்ட் மதுரைக்கிளையில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை முன்னுரிமை வழங்கக்கூடாது என ஆக. 31-ல் உத்தரவிட்டது. பின்னர் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.