சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 15,000க்கு மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 7 ஆயிரத்து 700 வழங்கப்படுகிறுது. இந்நிலையில், சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பகுதி நேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.