மதுரை: விவசாயிகள் மீதான காசோலை வழக்கினை சம்பந்தப்பட்ட வங்கி கிளை உள்ள மாவட்டத்திலேயே நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டது. மத்திய நிதித்துறை செயலர் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு வேளாண் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.