துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7,000 ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் வரிசையில் 9 வதாக ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 111 ரன்களை அடித்து நொறுக்கி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா, 106 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 19-வது சதத்தைப் பதிவு செய்தார்.