×

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7 ஆயிரம் ரன்கள் எடுத்து இந்திய வீரர் ரோஹித் சர்மா சாதனை

துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7,000 ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் வரிசையில் 9 வதாக ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில்  ரோஹித் சர்மா 111 ரன்களை  அடித்து நொறுக்கி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா, 106 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 19-வது சதத்தைப் பதிவு செய்தார்.

ரோஹித் ஷர்மா நேற்று வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தின்மூலம், அவர் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதுவரை இவர் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில்  அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களைக் கடந்த 3வது வீரர்  என்ற பெருமையை அடைந்துள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : One day cricket, 7 thousand, run, Rohit Sharma, record
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்