நூல் நூற்கும் கை ராட்டை குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம்... ரூ.4.60 லட்சத்துக்கு ஏலம்

அமெரிக்கா: நூல் நூற்கும் கை ராட்டை குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தின்போது ரூ.4.60 லட்சத்துக்கு விற்கப்பட்டது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஆர்ஆர் ஏல நிறுவனம் அண்மையில் நடந்திய ஏலத்தில் இந்த கடிதம் ஏலத்தில் விற்கப்பட்டது. அந்தத் கடிதத்தை ஒருவர் ரூ.4.6 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கினார். இந்தக் கடிதத்தை மகாத்மா காந்தி குஜராத்தி மொழியில் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு எழுதியுள்ளார். பாபுவின் ஆசீர்வாதங்கள் என்று மகாத்மா காந்தி அதில் கையெழுத்திட்டுள்ளார்.

அதில் நூற்பாலைகள் குறித்து நாம் என்ன நினைத்தோமோ அதுதான் நடந்துள்ளது, இருந்தபோதும் நீங்கள் கூறியதுதான் சரி. அனைத்துமே தறிகளை நம்பியே உள்ளது. கை ராட்டை முக்கியமானது. இவ்வாறு கை ராட்டையின் முக்கியத் துவம் குறித்து அதில் காந்தி விவரித்து எழுதியுள்ளார். இந்தக் கடிதம் எழுதப்பட்ட தேதி விவரங்கள் அதில் இல்லை என்று ஆர்ஆர் ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: