மாணிக்கவாசகர் நூலை வெளியிட்ட முனைவர்.சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்துத்துவா அமைப்புகள் மீது மாணவர்கள் கண்டனம்

சென்னை: மாணிக்கவாசகர் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்ட முனைவர் சரவணனுக்கு இந்துத்துவா அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதை எதிர்த்து மாணவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொல்லியல் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதியுள்ள மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நூலை சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த பெருமன்றத்துறைத் தலைவர், முனைவர் ச.சரவணன் பதிப்பிட்டிருந்தார். இதனிடையே, இந்த நூலில் உள்ள கருத்துக்கள் மாணிக்கவாசகரை இழிவு படுத்துவதாகக்  கூறி சில இந்துத்துவா அமைப்புகள் பல்கலைக்கழக வளாகத்திற்கே சென்று போராட்டம் நடத்தினர். அத்துடன் முனைவர் சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்கு இடையூரு தரும் வகையிலும், பேராசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கும் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பது மாணவர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஆனால் ஆசிரியர்களுக்கு எதிரான கருத்துக்களை ஏற்று கொள்ள முடியாதவர்கள் இதுபோன்ற உயிருக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முனைவர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்த போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: