சென்னை: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் எம்.பி.அருண்மொழித்தேவன் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னதாக கோயில் நிலத்தை அருண்மொழித்தேவன் ஆக்கிரமிப்பு செய்ததாக ஹெச்.ராஜா குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.