கோட்டயம்: ஜலந்தர் பிஷப் பிராங்கோ ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை முடிந்து கோட்டயம் பலாவில் உள்ள நீதிமன்றத்தில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ ஆஜர்படுத்தப்பட்டார். கேரளா கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை பிராங்கோ கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.