சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சென்னையில் தெரிவித்தார். மத்திய,மாநில அரசுகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்று கூறினார். மேலும் பிளாஸ்டிக் பை தடை குறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.